Friday, January 18, 2013

இயக்குனர் பாலாவை பற்றி


 பாலா மதுரையில் 1966 ம் ஆண்டு பிறந்தவர்.மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் பயின்றவர்.தமிழ் திரை உலகின் ஜாம்பவான் பாலுமகேந்திரா அவர்களிடம் துணை இயக்குனராக சேர்ந்து,திரைக்கலை பயின்றவர்.

சேது திரைப்படம் மூலம் தனது திரை பயணத்தை துவக்கிய பாலா அவர்கள்,இதுவரை ஐந்து படங்களை இயக்கியுள்ளார்.பாலாவின் திரைப்படங்கள் இதுவரை தேசிய விருதுகள்,பிலிம் பேர் விருதுகள்,தமிழக அரசு விருதுகள் மற்றும் பல விருதுகளை பெற்றுள்ளன.
பாலாவின் முதல் மூன்று திரைப்படங்கள் 13 பிலிம் பேர் விருதுகளை பெற்றுள்ளன.அவற்றில் பிதாமகன் மட்டும் 6 விருதுகளை பெற்றுள்ளது.

நான்காவது படமான "நான் கடவுள்" இரண்டு தேசிய விருதுகள்,மூன்று தமிழக அரசு விருதுகளை பெற்றுள்ளது.இந்தப் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.உலக சினிமா அரங்கில் தமிழ் சினிமாவை உயர்த்தப்பிடிக்கும் இவரது திரைப்படங்கள் யாதார்த்தமும்,தனித்துவமான அழகியலும் கொண்டவை.சமுதாயத்தின் விளிம்புநிலை மனிதர்களை படம் பிடிப்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்.வாழ்வியலின் எதார்த்தங்களை இவர் சொல்லும் அழகே தனியானது.இவருடைய ஒவ்வொரு திரைப்படமும் சினிமா பார்க்கும் ரசிகனை ஆழ்ந்து சிந்திக்கத்தூண்டும்.

No comments:

Post a Comment